உங்களை நினைத்தவுடன்
கண்களிலே வருகிறது நீர் திரண்டு
கண்களிலே வருகிறது நீர் திரண்டு
எங்கள் கைகளை பிடித்து கரை சேர்தவரே
கரை வந்த பின்பு கரைந்தது ஏனோ
எபோழுதும் எங்களை தேடிக்கொண்டே
இருக்கும் உங்களை
நாங்கள் தேட வேண்டும் என்று நினைத்தது ஏனோ
இருக்கும் உங்களை
நாங்கள் தேட வேண்டும் என்று நினைத்தது ஏனோ
உங்களோடு வாழ்ந்த நாட்களையும்
உங்களோடு கழித்த நேரங்களையும்
உங்கள் அன்பில் நனைத்த காலங்களையும்
எங்கள் மனதிலும் நினைவுகளிலும் பச்சை குத்தியவரே
மனமில்லாத மலர் போல
நீர் இல்லாத கடல் போல
இலை இல்லா மரம் போல
இவ்வுலகில் நீங்கள் இல்லாமல் நாங்களும்
நீங்கள் இல்லாத எங்கள் இல்லம்
நிலவில்லா வானம் போல் அல்லவா
காட்சியளிகின்றது
எங்களை செதுக்கிய சிற்பியன்றோ நீங்கள்
கண்களில் மறைந்தாலும் எங்கள்
செயல்களிலே வாழ்பவரே
எங்கள் கலங்கரை விளக்கே
உங்கள் காலடி அடைந்திட
இன்னமும் உங்கள் அன்பில் ஒளியால்
பத்திரமாய் பயணிக்கும்
உங்கள் அன்பு உள்ளங்கள்