வெள்ளி, 20 நவம்பர், 2009

உறவுகள்


அப்பா... இது ஒரு மந்திர சொல்லாகவே நினைக்கிறேன்.  விபரம் தெரியும் வயது வரை நம்மை சுற்றி ஒரு  பாதுகாப்பு  வளையத்தை ஏற்படுத்துவது  இவர்தான் . வாழ்கையில்   நாம் வளர்ந்து வரும் காலங்களில் இவரை பற்றி நாம் நினைப்பதில்லை, ஆனால்   இவரோ  நம்மைபற்றி , நமது வருங்காலத்தை  பற்றி மட்டுமே நினைப்பவர்.  தாயின் பாசம் மட்டும் நாம் அறிவோம் - காரணம   அன்பை வெளிபடையாக   காட்ட  கூடியவள் தாய் . ஆனால்   அன்பை கூட
அளவோடு  வெளிபடுத்த வேண்டியவர்  இவர்.   காரணம் எங்கே நாம் அதை தவறாக பயன்படுத்தி கொள்வோமா என்ற எண்ணம்  இவருக்கு  எப்போதும் உண்டு. நமது தேவைகளை  பூர்த்தி  செய்வதே  இவரது  ஒரே  லட்சியம் , சில நேரங்களில் இதற்காக இவர் படும் கஷ்டங்கள் துன்பங்கள்  பல ஆனாலும் அதை பற்றி நம்மிடம்       சொல்வதும் இல்லை தெரியபடுத்துவதும் இல்லை. நம்  வாழ்கையில் எத்தனையோ உறவுகள்  வந்து சென்றாலும்  இவர் இருக்கும்போது  இவரை நாம் நினைத்து பார்பதில்லை,  இவரை  நினைத்து அழும்பொழுது இவர் அருகில் இருப்பது இல்லை......