வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆண்டுகள் ஆனது இரண்டு
 உங்களை நினைத்தவுடன்
கண்களிலே வருகிறது நீர் திரண்டு


எங்கள் கைகளை பிடித்து கரை சேர்தவரே 
கரை வந்த பின்பு கரைந்தது ஏனோ


எபோழுதும் எங்களை தேடிக்கொண்டே
  இருக்கும் உங்களை
 நாங்கள் தேட வேண்டும் என்று நினைத்தது ஏனோ


உங்களோடு வாழ்ந்த  நாட்களையும்
உங்களோடு கழித்த நேரங்களையும்  
உங்கள் அன்பில் நனைத்த காலங்களையும்
எங்கள் மனதிலும் நினைவுகளிலும் பச்சை குத்தியவரே


மனமில்லாத மலர் போல   
நீர் இல்லாத கடல் போல
இலை இல்லா மரம் போல
இவ்வுலகில் நீங்கள் இல்லாமல் நாங்களும்


நீங்கள் இல்லாத எங்கள் இல்லம்
நிலவில்லா வானம் போல் அல்லவா
காட்சியளிகின்றது   


எங்களை செதுக்கிய சிற்பியன்றோ நீங்கள்
கண்களில் மறைந்தாலும்  எங்கள்
செயல்களிலே வாழ்பவரே


எங்கள் கலங்கரை விளக்கே
உங்கள் காலடி அடைந்திட
இன்னமும் உங்கள் அன்பில் ஒளியால்
பத்திரமாய் பயணிக்கும்
உங்கள் அன்பு உள்ளங்கள்
  

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பிரிவுகள்

பிறக்கும் போதே கருவறையில்   இருந்து பிரிக்கப்பட்டோம் ஆரம்பமாகிவிட்டது
நமது பிரிவுகளின் இலக்கணமும் துவக்கங்கலும்
முதலில் பிரிந்தது நிம்மதியை மனங்களை கொன்று தின்னும் இந்த மானிட உலகத்திலே பிரிவுகளை வைத்து மனிதனை கொன்று தின்றான் இறைவன்
உடலை காயப்படுத்த பல ஆயுதங்கள் உள்ள இந்த உலகத்திலே மனதை
காயப்படுத்த மிகவும் கூர்மையான ஒரே ஆயுதம் பிரிவு
கல்லறைகளால் மட்டும் பிரிவுகள் வருவதில்லை சில்லரைகலாலும்
வருவதுண்டு
இன்பங்களை மட்டுமே சுவைக்க நினைக்கும் நம் இதயங்கள் உறவுகளின் பிரிவுகளையும் துன்பங்களையும் ஜிரநிப்பதில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமானது பிரிவு


அப்பா நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்
உங்கள் குரலை கேட்காத எங்கள் காதுகளை
செவிடகவே உணர்கின்றோம்
உங்களை பார்க்க முடியாத இந்த கண்களை
குருடாகவே நினைகின்றோம்

நீங்கள் இருக்கும் வரை தினமும் உங்கள் அரவணைப்பால்
தினமும் பிறந்து கொண்டு இருந்தோம் ஆனால்
நீங்கள் இறந்த பிறகோ உங்களை 
நினைத்து தினமும் இறந்து கொண்டு அல்லவே இருக்கின்றோம்.