வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆண்டுகள் ஆனது இரண்டு
 உங்களை நினைத்தவுடன்
கண்களிலே வருகிறது நீர் திரண்டு


எங்கள் கைகளை பிடித்து கரை சேர்தவரே 
கரை வந்த பின்பு கரைந்தது ஏனோ


எபோழுதும் எங்களை தேடிக்கொண்டே
  இருக்கும் உங்களை
 நாங்கள் தேட வேண்டும் என்று நினைத்தது ஏனோ


உங்களோடு வாழ்ந்த  நாட்களையும்
உங்களோடு கழித்த நேரங்களையும்  
உங்கள் அன்பில் நனைத்த காலங்களையும்
எங்கள் மனதிலும் நினைவுகளிலும் பச்சை குத்தியவரே


மனமில்லாத மலர் போல   
நீர் இல்லாத கடல் போல
இலை இல்லா மரம் போல
இவ்வுலகில் நீங்கள் இல்லாமல் நாங்களும்


நீங்கள் இல்லாத எங்கள் இல்லம்
நிலவில்லா வானம் போல் அல்லவா
காட்சியளிகின்றது   


எங்களை செதுக்கிய சிற்பியன்றோ நீங்கள்
கண்களில் மறைந்தாலும்  எங்கள்
செயல்களிலே வாழ்பவரே


எங்கள் கலங்கரை விளக்கே
உங்கள் காலடி அடைந்திட
இன்னமும் உங்கள் அன்பில் ஒளியால்
பத்திரமாய் பயணிக்கும்
உங்கள் அன்பு உள்ளங்கள்
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக